கோவை, ஜூலை 15- தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலமாக சில இளைஞர்கள் தொடர் பில் இருப்பதாக பீளமேடு, உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் கோவை மாநகர காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞர்கள் சிலர் முகநூல் வாயிலாக தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையினரும், மாநகர காவல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளின் முடி வில் கிடைத்த ஆதாரங்களின் பேரில் கைது நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாநகர நுண்ண றிவு காவல் துறையினர் தொடர்ந்து சந்தேகத் திற்குரிய சில நபர்களின் முகநூல்களைக் கண்காணித்து வந்துள்ளனர். அதேபோல, ஏற்கனவே குற்ற சம்பவங்க ளில் தொடர்புடைய நபர்களையும் தீவிரமாகக் கண் காணித்து வந்தனர். இந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தின ருடன் சமூக வலைதளங்கள் மூலம் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி கோவை மாநகர காவல் துறையினர் திங்களன்று மூன்று குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில், கரும்புக்கடையை சேர்ந்த ஆட்டோ பைசல் என்பவ ரது வீட்டிலும், திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகி ஃபாரூக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரது வீட்டி லேயும், பீளமேடு பகுதியில் முகம்மது புர்கான் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.