தருமபுரி, நவ.29- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் பள்ளி மாணவியை பாலியல் சீண் டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல் பட்டுவருகிறது. இப்பள்ளி யில் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 10 நாட் களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் கணித ஆசிரியர் பிரகாஷ்குமார் (54) என்பவர் 6-ம் வகுப்பு பயிலும் இரு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒருமாணவியிடம் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனை அம்மாணவி பெற் றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் பள்ளியின் தலைமையாசிரியர் சிவகாமிசுந்தரி, வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆகியோரிடம் புகார் அளித் தார். ஒருவாரம் கடந்த பின்னும் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், ஆசிரியர் பிரகாஷ்குமார் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.