ஈரோடு, ஜூலை 17- ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உண்மை நிலை விதைகள் விற்பனை செய்பவர்கள், முளைப்பு திறன் உறுதி செய்து அதன் அடிப்படை யில் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்கு னர் எம்.வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உரிமம் பெற்று, விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் முளைப்புத்திறன் பரிசோதனை முடிவுகள் பெறப் பட்ட பின்னரே, விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும். விதை மாதிரிகள் எடுத்து, அதை விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, பகுப்பாய்வு முடிவுக்கு பின்னரே விவசாயிகளுக்கு விற்க வேண்டும். மேலும், விபர அட்டையில், 14 விபரங்களு டன் உள்ள உண்மை நிலை விதைகளின் உண்மை நிலை அட்டைசிப்பங்களில் பொருத் தப்பட்டிருக்க வேண்டும். இவ்விதிகளை மீறு வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.