உதகை, டிச. 16- உதகையில் கடும் மழைக்கு சேதம் அடைந்த நடை பாதையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவட்டத்தில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட பழைய உதகை பகுதியில் உள்ள நடைபாதை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கடும் சேதம் அடைந்தது. இத னால் கடந்த இரண்டு மாதமாக நடைபாதையை பயன்ப டுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி றார்கள். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இன்று வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந் தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.