tamilnadu

img

அன்றும் இன்றும் பி ஆர் நடராஜன்

அன்று

கோவை மக்களவை தொகுதி மக்களின் பிரதிநிதியாக இருந்தபோது பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9லட்சம் அளித்துள்ளார். இந்த நிதியுதவியின் மூலம் பள்ளிக்கு 20 கணினிகள் வாங்கப்பட்டு 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர். குறிப்பாக, கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு அருகில் இப்பள்ளி அமைந்திருந்ததால் அத்தொழிலாளர்களின் குழந்தைகள் பெரும் பயனடைந்து வந்தனர்.


இன்று


குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளும், அதையொட்டி இருந்த குடிசைகளும் அண்மையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் அங்கு வசித்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளன. அதையொட்டி இப்பள்ளியின் மாணாக்கர் எண்ணிக்கை வரும் கல்வி ஆண்டில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

;