tamilnadu

முறையாக குடிநீர் விநியோகம் செய்திடுக

சேலம், ஜூலை 23- சங்ககிரி தாலுகா, இடங்கண சாலை பேரூராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, இடங்கணசாலை பேரூ ராட்சி பகுதியில் உள்ள செட்டி யார் தெரு, மோட்டு காடு ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாததாலும், இப் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் வற்றியதால் பொதுமக்களுக்கு குடி நீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இப்பகுதிக்கு காவிரி குடிநீர் இருபது நாளைக்கு ஒருமுறை மட்டுமே தருவதால் பொதுமக்க ளுக்கு போதிய அளவு நீர் கிடைப்பதில்லை. எனவே, காவிரி குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். பொது சுகா தார வளாகத்திற்கு நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை செய்து பொதுமக்களின் அடிப் படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி செல் வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் அப் பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமனிடம் மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன் மற்றும் கிராமமக்கள் எஸ்.தியாகு, வி. சந்திரசேகர், எம்.சிவகாமி, ரகுபதி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.