tamilnadu

உதகை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

உதகை ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை

உதகை, மே 9-நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் 2019ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 14 வயது முதல் 40 வயது வரையுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயதுவரம்பில்லை. குன்னூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துநர், கடைசலர், கம்மியர், மின்சாரப்பணியாளர். தச்சர் மற்றும் பற்ற வைப்பவர் பிரிவுகளிலும், 8ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் கம்பியாள் தொழிற்பிரிவுக்கு அனைத்து பிரிவினரும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

கூடலூரில் பழங்குடியினருக்காக இயங்கும் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொருத்துநர், மோலட்டார் வண்டி கம்மியர், கம்பியாளர், பற்ற வைப்பவர் மற்றும் குழாய் பொருத்துபவர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். சேர்க்கைக்குப் பிறகும் காலியாக உள்ள இடங்கள் இதர வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படும். மேலும் விபரங்களுக்கு 0423 2231759, 2233010, பழங்குடியினர் 0426 2263449 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


பெருந்துறை - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு, மே 9-பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கு நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு முழுநேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான  Direct Second Year

Diploma Admission விண்ணப்பப்படிவம் இக்கல்லூரிவளாகத்தில் மே 10 ஆம் தேதி வரை (அரசு விடுமுறைநாட்கள் மற்றும் சனி, ஞாயிறு தவிர்த்து) வழங்கப்படுகிறது.மேலும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 17 ஆம் தேதி மாலை வரை (அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு தவிர்த்து)வழங்கப்படும். நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் பொதுபிரிவினர் (BC /MBC / OBC / DNC / OC)ரூ.150 ரொக்கமாகச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் பழங்குடி/பட்டியல் (SC/ST) பிரிவினர்அவர்கள் சாதி சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதி, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிபெற்றிருப்பதுடன் (Academic) இயற்பியல், வேதியியல்,கணிதம், உயிரியியல் அல்லது தொழில் பிரிவில் (Vocation) கணிதம், இயற்பியல், வேதியியல் (ஏதாவது ஒன்று, சம்பந்தப்பட்ட தொழில்பிரிவுபாடங்கள் எழுத்துமுறை, செய்முறை – Theory மற்றும் Practical)அல்லது அதற்குச் சமமான படிப்பு பயின்றிருக்கவேண்டும். அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பயிற்சியில் உரிய தொழில்பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை கல்லூரியில் சமர்ப்பிப்தற்கான கடைசி தேதி, நேரடி இரண்டாமாண்டிற்கு மே 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், முதலாமாண்டு மே 17 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கும்.மேலும் விவரங்கள்  www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.