tamilnadu

img

நீட் தேர்வு ரத்துக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன்.15- மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக இந்தி மற்றும் சமஸ்கிருத்தைத்தை திணிக்கும் முயற்சியைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் சு.தேன்மொழி, மாவட்டத் தலைவர்கள் மு.அறிவொளி, க.மாரிமுத்து, செயலாளர் ப.வீரப்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாநில பகுத்தறிவாளர் அணி துணைச் செயலாளர் அ.சரவணன் பொதுக்குழு உறுப்பினர் இர.புட்பநாதன், உள்ளிட்டோர் பேசினர்.