tamilnadu

img

போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

அன்னூர், மே 9-அன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் 7 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இச்சிக்னல் அமைக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சரியாக செயல்படாமல் உள்ளது. இச்சாலையானது கோவை, நீலகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்நிலையில், சிக்னல் சரியாக செயல்படாததால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லுபவர்களுக்கு கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, போக்குவரத்து சிக்னலை சரி செய்யுமாறு, போக்குவரத்து காவல்துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;