ஈரோடு, ஆக.30– பெண் சமூகத்தை இழிவாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து ஈரோட்டில் மாதர் சங்கத்தின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்த மிக மோசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த பெண்கள் சமூகத் தையே இழிவுபடுத்தும் இத்தகைய பேச்சுக்கு மாதர் சங்கம் உளிட்ட பெண்கள் அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்கள் கடும் கண்ட னத்தை தெரிவித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக ஈரோட்டில் வியாழனன்று ஆடிட்டர் குருமூர்த் தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நசியனூரில் தாலூகா செயலாளர் சரோஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பா.லலிதா, மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிரசன்னா, மாவட்ட பொரு ளாளர் கே.கொங்குநதி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கோமதி, தாலூகா கமிட்டி செயலாளர் ந. கலாமணி, கோபி கமிட்டி செயலாளர் ஆ.முத்தாயம்மாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்று குரு மூர்த்தியை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.