குழந்தைகளை பாதுகாக்க தாவரவியல் பூங்காவில் தொட்டில்
நீலகிரி, டிச. 20 - நீலகிரி மாவட்டத்தில் பெற்றோர்களால் வளர்க்க இயலாத குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத் தில் தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, நீலகிரி மாவட்டத்தில் சமீப காலங்களில் பிறந்த குழந்தைகளை சாலையோரங்களிலும், வனவிலங்கள் நடமாடும் பகுதிகளிலும் விட்டு செல்வது அதி கமாகி வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு பாது காப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரண மாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்தொட்டில் அமைந்துள்ள பகுதியின் அருகா மையில் கண்கானிப்பு கேமராக்கள் ஏதுமில்லை. எனவே குழந்தையை வளர்க்க இயலாத நிலை யில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை சாலை யோரங்களிலோ, குப்பை தொட்டிகளிலோ, வனவி லங்குகள் நடமாடும் பகுதிகளிலோ விட்டு செல்லாமல் அந்த தொட்டிலில் குழந்தையை விட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அந்த தொட்டிலில் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அச்சிடப்பட்டுள்ளது. ஆகவே குழந்தையை விட்டு சென்றதும் தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும். இதனை தொடர்ந்து குழந்தை உடன டியாக மீட்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வையார் விருது பெற விண்ணப்பம் வரவேற்ப்பு
ஈரோடு,டிச 20- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், பெண்களின் முன் னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்தோரை ஊக்கு விக்கும் வகையில் 2019- 20 ஆம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் தமிழ்நாடு அரசால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விருதுக்கான கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உடன் சமர்ப்பிக் கலாம். இதற்கு, தகுதியானவர்களான தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற் பட்டவராக இருக்க வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராக இருக்க வேண்டும். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான நபர்கள் ‘மாவட்ட சமூகநல அலுவலகம், 6-வது தளம், மாவட்ட ஆட்சி யரகம், ஈரோடு“ என்ற முகவரியில் டிச 26 ஆம் தேதிக் குள் மேற்கண்ட செயல்பாடுகளுக்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை
ஈரோடு,டிச 20- ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவித்திட 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் 27 மாவட்டத்தில் வருகின்ற டிச 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணி களை நடத்தி வரும் மாவட்ட நிர்வாகம், தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவித்திட 24 மணிநேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மூன்றாவது தளத்தில் உள்ள உள் ளாட்சித் தேர்தல் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் 0424 - 2255365 என்ற தொலைபேசி எண்ணிலும், மேலும், 7402905098 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம். இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு - 0424-2254397, மொடக்குறிச்சி - 0424-2500260, கொடுமுடி - 04204-222339, பெருந்துறை - 04294-220522, சென்னிமலை -04294-250256, பவானி 04256-230368, அம்மாபேட்டை - 04256-227036, அந்தியூர் - 04256-260937, கோபிச்செட்டிப்பாளையம் - 04285-222079, நம்பியூர் - 04285-267228, தூ.நா.பாளையம் - 04285-260232, சத்தியமங்கலம் - 04395-220234, பவானிசாகர் - 04295-240223, தாளவாடி - 04295-245233 போன்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராடுபவர்கள் மீது பொய் வழக்குகள்
திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு
கோவை, டிச. 20 – போராடுபவர்கள் மீது பொய் வழக் குகள் புனையப்படுகிறது, வெள்ளைக் காரர் ஆட்சியில் கூட இப்படி இல்லை என மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள் ளார். மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை, மே பதினேழு இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமு ருகன் காந்தி மற்றும் எஸ்டிபிஐ கட்சி யின் தேசியத் தலைவரின் ஒருவரான தெஹ்லான் பாகவி ஆகியோர் வெள்ளி யன்று நேரில் சந்தித்தனர். இதனைத்தொடர்ந்து கோவை மத் திய சிறை முன்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளரை சந்தித்து பேசு கையில், மேட்டுப்பளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்ப வத்திற்கு நியாயம் கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. நாகை திருவள்ளுவனுக்கு விடுதலை என்பது இன்னும் சாத்தியப்படவில்லை. பாதிக் கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்டு போராடியது தவறில்லை. நாகை திரு வள்ளுவன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது. அரசியல் சாசனம் போராடும் உரி மையை சரி என்கின்றது. ஆனால் அர சால் ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. சமூக கோரிக்கைக்காகப் போராடும் தலைவர்களை சமூக விரோதிகள் போல் சித்தரித்து குண்டர் சட்டம் போடு வது வன்மம். இது போன்று போரா டுபவர்கள் மீது பொய் வழக்குகள் புனை யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒட்டுமொத்த மக்களும் கையில் எடுத் துள்ளனர். அவசரநிலை பிரகட னத்திற்கு பிறகு, மோடி அரசுக்கு எதி ரான வலிமையான போராட்டமாக இது உருவெடுத்துள்ளது. இப்போராட் டமானது மோடி அரசு பதவி வில கும் வரை தொடர்ந்து நடைபெறும் எனவும், இச்சட்டத்திற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.
முன்னாள் படைவீரர்கள் விருப்ப மனு அளிக்கலாம்
கோவை, டிச. 20- தமிழக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்திட முடிவுசெய் யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக உள்ளாட்சித் தேர்தலானது வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்திட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பணிக்கு தகுதியும், திறனும் உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீர்ர்கள் தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் படைப்பணி விபரச்சான்று ஆகியவையுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் உதவி இயக் குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விருப்ப மனு விண் ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைகளின் படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.