tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்

அவினாசி, ஆக. 11- உள்ளாட்சித் தேர்தலை  உடனே  நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள்  கோரிக்கை மாநாடு வலியுறுத்தி யுள்ளது. அவிநாசி அடுத்து கருணைபாளை யத்தில் கே.எஸ் .கே. நினைவு திடலில் வேலாயுதம்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. இந்த மாநாட்டிற்கு முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.சாமியப்பன் தலைமை வகித்தார். விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலை வர் ஏ.முத்து ரத்தினம் வரவேற்றார். டி.ஞானகுமார், ஆர்.பாப்பாத்தி, வி.வீரன், ஆர்.செல்வி, பி. நாகராஜ், ஏ.வேலுச்சாமி, பி.குப்புசாமி, எஸ்.சுப்பிரமணி, வி.சரஸ்வதி, கே.மணி, கே.வையாபுரி, எஸ்.சுப்பிரமணி, பி.மூர்த்தி, சி.ராஜாமணி, என்.சுப்பிர மணி, கே.நடராஜ், என்.கருப்புசாமி, வி.பி.முருகேஷ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மாநாட்டில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நட ராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் பி.முத்துச்சாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, பி.முருகேசன், ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.சண்முகம், ஆர்.பழனிசாமி, ஏ.ராஜன், ஆர்.வேலுச் சாமி, பி.கனகராஜ், வீ.தேவி, ஆர்.முத்து ராயப்பன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.

தீர்மானங்கள் 

வேலாயுதம்பாளையம் ஊராட்சி யில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க  வேண்டும். பழுதடைந்த தெருவிளக்கு களை சீரமைத்து மற்றும் புதிதாக தெரு விளக்கு அமைக்க வேண்டும். தாமரைக்குளம் ஏரிகள் மற்றும் நீர்  வழித் தடங்கள், குளங்களைத் தூர்வார வேண்டும். அங்கீகாரம் இல்லாத வீடு களுக்கு சிறப்பு முகாம் நடத்தி அங்கீ காரம் வழங்க வேண்டும். வீடில்லா ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். பாரதி நகர் விஐபி கார்டன், லட்சுமி கார்டன், சக்தி நகர், தாமரை கார்டன், ருமா கார்டன், மகா நகர்,  கொடிகாத்த குமரன் நகர், ஐஸ்வர்யா கார்டன், ராயர் நகர், அவினாசி லிங்கேஸ்வரர் நகர், அன்னபூரணி நகர், காசி கவுண்டன் புதூர், கருணாம் பிகை நகர், ராயன் கோயில் மயா னத்திற்கு பின்புறம் ஆகிய பகுதி களில் தார் சாலை, சாக்கடை வசதி, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.  ராயன் கோயில் காலனி மற்றும் மங்கள ரோடு பகுதிகளில்  சாக்கடை வசதி, பழுதடைந்த சாலைகளை சீர மைத்து மற்றும் அங்குள்ள கிணற்றை தூர் வாரி சீரமைக்க வேண்டும். கணினி மையத்தை மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி  மதில் சுவர், குடிநீர் வசதி மற்றும் கலை அரங்கம் அமைத்து தர வேண்டும். கருணைபாளையத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உரிய நேரத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். துணை சுகா தார நிலையத்தில் கூடுதல் செவிலி யர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும். பூங்காவை புதுப்பிக்க வேண்டும். சின்ன கருணை பாளையம், காடேஸ்வரா நகர் ஏ.டி.  காலனி, பாலாஜி நகர், குடிநீர் இணைப்பு, ஸ்ரீ கருணாம்பிகை நகர், உமையஞ் செட்டிபாளையம், ஏ எஸ் கணபதி நகர், பூளக் காட்டு பாளையம், திருவள்ளுவர் நகர், சக்தி நகர், ஆதி திராவிடர் காலனி ஆகிய பகுதிக ளில் பழுதடைந்த சாலைகள், சாக்கடை கள் , மின் கம்பங்கள், பாலங்கள் அமைத்து தினசரி குப்பை அள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை முறையாக பயன்படுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள் ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரவேண்டும்.  ஆட்டையம்பாளையத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை அரசு கட்டிடத் திற்கு மாற்றி அமைக்க வேண்டும். பழுதடைந்த சாலைகள், சாக்கடை களை சீரமைத்து தர வேண்டும்.  பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றியமைக்க வேண்டும். பயன்பாட் டிற்கு வராமல் இருக்கும் தரைமட்ட தொட்டியை பயன்படுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.  வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகாமையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழை நீர் பள்ளிக்கு போகா மல் பாதுகாக்க வேண்டும். கேவி.ஆர். கார்டன், செட்டி காடு, அரவங்காடு, புளியங்காடு, வேலாயுதம்பாளையம் ஏ.டி. காலனி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் குடிதண்ணீர் வசதி மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.