tamilnadu

img

முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் செல்லும் கழிவுநீர்- பொதுமக்கள் அவதி

சேலம், டிச.13- முறையான சாக்கடை கால்வாய் வசதி  இல்லாததால் சாலையில் செல்லும் கழிவு நீரால் சேலம் மாநகராட்சி 60ஆவது வார்டு பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.  சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. மாநகரத்தின் மையப்பகுதியான 4  ரோடு அருகில் உள்ள 27 ஆவது வார்டிற் குட்பட்ட அரிசிபாளையம், சின்னப்பன் தெரு ஆகியவை கடந்த ஐந்து ஆண்டு களுக்கு மேல் தெருக்கள் முழுவதும் சேதம டைந்து மண் தரையாக காட்சியளிக்கிறது.  மேலும் கழிவுநீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கழிவு நீர்  முழுவதும் தெருவில்   ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை   மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரிலும், மனு  மூலமாக தெரிவித்தனர். ஆனால் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை.  மேலும் இந்த தெருவில் மாநகராட்சியின் நகர் நல மருத்துவமனை செயல்பட்டு வரு கிறது. இந்த மருத்துவமனைக்கு நாள் தோறும் எண்ணற்ற கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.  இந் நிலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேட் டால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.    எனவே மாநகராட்சி நிர்வாகம் சின்னப் பன் தெருவிற்கு முறையாக சாலை மற்றும்  சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.