tamilnadu

img

கல்விக் கொள்கை வரைவை திரும்பப்பெறுக: ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

உடுமலை, செப். 13- உடுமலை தாலுகாஅலுவல கம் முன்பு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்றிட வலியுறுத் தியும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிக ளுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஜாக்டோ -ஜியோ சார்பில் ஒருங்கி ணைப்பாளர் தங்கவேல், வைர முத்து தலைமையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு பேரணி துவங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அதன்பின் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.