ஈரோடு, ஜூலை 28- சிஐடியு ஈரோடு மாவட்ட மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாத்மா காந்தியின் நினைவு கூட்டம் நடத்தக் கூடாது என்றும், அதையும் மீறி கூட்டம் நடத்தினாலும் மகாத்மா காந்தியை பற்றி மட்டும் பேச வேண்டும் மாறாக கோட் சேவை பற்றி பேசக்கூடாது என்றும் காவல் துறையினர் விசித்திரமான நிபந்தனை விதித்து வருகிறது. ஈரோடு காவல்துறை தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.