பொங்கலூர் ஒன்றியம் வாவிபாளையம் பகுதியில் உயர் மின்கோபுர நிலஅளவை பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளிடம் அத்துமீறி அராஜகமாக செயல்பட்ட திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரனை பணி இடை நீக்கம் செய்து துறைரீதியான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஞாயிறன்று வாவிபாளையத்தில் உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.