tamilnadu

img

அடிப்படை வசதியில்லாத அரசு மேல்நிலைப்பள்ளி

தருமபுரி வட்டம் இலக்கியம் பட்டி ஊராட்சியில் இலக்கியம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1974 ஆம்  ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு  500க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வச தியில்லாமலும் பராமரிப்பின்றியும்  உள்ளது. மேலும், இப்பள்ளியின் கட் டிடம் விரிசல் விட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. வகுப்பறையின் தரை மற்றும் சுவருக்கு பெயிண்டு அடிக்காமல் இருட்டு அறையாக, பாழடைந்த நிலையில் உள்ளது. வகுப்பறையின் ஜன்னல்கள், கதவு உடைந்து சேதமடைந்துள்ளது. சில வகுப்பறைகளில் ஜன்னல்களே இல்லாத நிலை உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்க ளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு சமூக பொரு ளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2013-14 ஆம்  ஆண்டில் ஒகேனக் கல் குடிநீருக்கு சின்டக்ஸ்டேங் அமைத்து குடிநீர் விநியோகிக்க ரூ.1 லட்சம் செலவிடப்பட்டது. தற் போது ஒகேனக்கல் குடிநீர் வரா மல் சின்டக்ஸ் தொட்டி காட்சி பொரு ளாக மாறியுள்ளது. மேலும் 2012-13  ஆம் ஆண்டில் தருமபுரி சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந் திரம் பொருத்தப்பட்டது. தற்போது இயந்திரம் பழுதடைந்த நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கிடைப்பதில்லை. இந்நிலையில் பாதுகாப்பற்ற சுத்திகரிக்கப்படாத புளோரைடு கலந்த குடிநீரை மாணவர்கள் குடித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் அவ்வப்போது காய்ச்சலுக்கு உள்ளகின்றனர். இதேபோல், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதியும் இல்லை, கழிப்பறை முறை யாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் விசுகிறது. மேலும் கழிப்பறை முழுவதும் மஞ்சள்  நிறமாக மாறியுள்ளது. பள்ளியின் மைதானத்தில் பேஸ்கட் பால் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளது. மைதானத்தில் புற்கள் முளைத்து புதர் போன்று காட்சியளிக்கிறது.  எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறையை சுத்தப்ப டுத்துதல், விளையாட்டு உபகர ணங்களை சரிசெய்தல், வகுப்ப றையை நவீனப்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத் தியுள்ளனர்.