ஈரோடு, ஜூலை 9- ஈரோடு கனரா வங்கி யின் தொழில் பயிற்சி நிலை யம் மூலம் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 15 ஆம் தேதி முதல் பத்து நாட்கள் நடக்க உள்ளது. ஈரோடு ஆஸ்ரம் மெட்ரி குலேஷன் உயர்நிலை பள்ளி வளாகம், 2வது தளத்தில் இப்பயிற்சி வழங் கப்படுகிறது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். பயிற்சிக்கு கட்டணம் ஏது மில்லை. இலவசமாக மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, பயிற்சி நிலைய தொலை பேசி எண்: 0424 2400338ல் தொடர்பு கொள்ளலாம்.