tamilnadu

img

வேளாண்மை தொழில்நுட்பங்கள் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கம்

இளம்பிள்ளை, நவ.27- வீரபாண்டி வட்டாரப் பகுதியில் வேளாண்மை தொழில்நுட்பங்களை கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டன.   சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள வீர பாண்டி வட்டாரம் அரியாம் பாளையம் மற்றும் புத்தூர் அக்ரஹாரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ்  வேளாண்மை தொழில் நுட்பங்களை விவசாயி களுக்கு எளிதாக எடுத்துக் கூறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.வேளாண்மை உதவி இயக்குனர் என்.நாக பசுபதி தலைமை தாங்கினார். அட்மா திட்ட  செயல்பாடுகள், நுண்ணீர் பாசனம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், பிரதம  மந்திரி விவசாயிகள் பென்ஷன் திட்டம்,  பிரதமர் கவுரவ நிதித் திட்டம், கூட்டு பண்ணைத் திட்டம், வேளாண் இயந்திர மாக்கல்,   தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய  உணவு பாதுகாப்புத் திட்டம், பட்டு வளர்ப்பு மற்றும் கோமாரி நோய் தடுப்பு ஆகிய வேளாண் திட்டங்கள் குறித்து நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.  ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சி .சரஸ்வதி, தீபன் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.