tamilnadu

img

நலவாரியத்திற்கு நிரந்தர நிதியை ஏற்படுத்திடுக

கோவை, ஆக.11- மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று முறைசார தொழிலாளர் நலவாரியத் திற்கு நிரந்தர நிதியை உருவாக்க வேண் டும் என வலியுறுத்தி பொது தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சிஐடியு கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் 8 ஆவது மாநாடு காட்டூர் மில் தொழிலாளர் சங்க அலுவ லகத்தில் ஞாயிறன்று மாவட்ட தலைவர் பி.ராமு தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை பி.எம்.கிருஷ்ணசாமி ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து சாலை போக்குவரத்துதொழிலாளர் சம் மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி  சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாதர்சங்க மாநிலக்குழு உறுப்பி னர் டி.சுதா ஆகியோர் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து செயலாளர் டி.வி.ரமணி, பொருளாளர் பி.காளிமுத்து ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். இம்மாநாட்டில், முறைசார நலவாரி யத்திற்கு நிரந்தர நிதியை உருவாக்க வேண்டும். பணப்பயன்கள் கேட்டு விண் ணப்பித்து நிலுவையில் உள்ள மனுக்களின் மீது உடனடியாக தீர்வு எட்டப்பட வேண் டும். தொழிற்சங்க தலைவர்களின் பிரதி நிதித்துவத்தை அலட்சியப்படுத்தும் நல வாரிய அதிகாரிகளை கண்டித்தும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சங்கத்தின் தலைவராக பி.காளி முத்து, பொது செயலாளராக டி.வி.ரமணி, பொருளாளராக பி.ஈஸ்வரன் மற்றும் நாராயணசாமி, விவேக்குமார், மல்லிகா, ஸ்டீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எம்.அருண கிரிநாதன் உரையாற்றினார். முடிவில் ஸ்டீபன் நன்றி கூறினார்.