tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

கோழி வளர்ப்பு  இலவச பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு, ஆக.2- ஈரோட்டில், கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சி வரும் ஆக.5 ஆம் தேதி முதல் ஆக.17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, கரூர் பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம் பைபாஸ் பேருந்து நிறுத்தம், ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி வளாகம் 2 ஆம் தளத்தில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பயன் பெறலாம். தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண் ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. இலவசமாக மதிய உணவு வழங்கப்படும். மேலும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, 0424 2400338 என்ற எண்ணில் தொடர்பு கெல்லலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளர்.

பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஆக.2- தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு  விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற இணையதளம் மூலம் வரும் ஆக.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய  தற்காலிக உரிமம் கோரி விண்ணப் பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபா ரத்தை துவங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட் டுள்ளது.  அதன்படி தற்போது மனுதாரர்கள் வெடிபொருள் விதிகள் 2008இன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங் கள் ஏதேனும் ஒன்றில் சேவைக் கட்ட ணமாக ரூ.500 மட்டும் செலுத்தி விண் ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட் டுள்ளது.  இந்த விண்ணப்பங்களை வரும் ஆக.31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.   குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்த மனுதாரர்கள், மேற்படி சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்ட தற்காக வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டுடன் வரைப்படங்கள் 6, கிரயப் பத்திர நகல்கள் (6 அசல் மற்றும் 5  நகல்கள்), சேவைக் கட்டணம் ரூ.500 செலுத்தியதற்கான ரசீது, முகவரிக் கான ஆதாரம் (நிரந்தர கணக்கு எண்  அட்டை, ஆதார் அட்டை, குடும்ப  அட்டை) சொத்துவரி செலுத்தியதற் கான ரசீது மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங் கள் மற்றும் ஆவணங்கள் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டு, ஸ்தல தணிக்கை குறிப்பு,  பரிந்துரை அறிக்கைகள் கிடைக்கப் பெற்று பரிசீலனை செய்த பின், விண் ணப்பம் ஏற்கப்பட்ட தெனில் தற் காலிக உரிமத்தையும், நிராகரிக்கப் பட்டதெனில் அதற்கான ஆணையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். மனுதாரர்கள் இதனை  இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.