திருப்பூர், ஜூலை 23 - பொங்கலூர் ஒன்றியம் ஆண்டி பாளையம் கிராமத்தில் கடும் குடி நீர் தட்டுப்பாடு இருக்கும் நிலை யில் இப்பிரச்சனைக்கு உடனடி யாக மாற்று ஏற்பாடு செய்வது டன், நிரந்தரத் தீர்வு காண வலியு றுத்தி அந்த கிராம மக்கள் மார்க் சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். பெருந்தொழுவு ஊராட்சி ஆண்டிபாளையம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவு கிறது. இங்கு வசிக்கும் மக்கள் சுற்றிலும் உள்ள விவசாய தோட் டங்கள் மற்றும் தொலை தூரத்தில் உள்ள ஆழ்குழாயை நம்பி தினமும் ஓரிரு குடங்கள் குடிநீர் பெரும் நிலை உள்ளது. இங்குள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பல முறை மனுக் கொடுத்தும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டும் அவ்வப்போது தற்காலிக நிவாரண நடவடிக்கைகள் எடுப்ப துடன் பிரச்சனையைத் தீர்க்காமல் அதிகாரிகள் விட்டு விடுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபாளை யத்தில் உடனடியாக குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரியும் 50க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம் பத், மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் காந்திமதி, விவசாயத் தொழி லாளர் சங்க நிர்வாகி சுந்தரம் உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய ஆணையரைச் சந்தித்து இது பற்றி பேசினர். ஆனால் ஊராட்சி ஒன்றி யத்திலும், ஊராட்சியிலும் நிதி இல்லாததால் இப்போதைக்கு எது வும் செய்ய முடியாது என்று அதி காரிகள் அலட்சியமாக பதில் கூறி னர். இதைத்தொடர்ந்து குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தி லேயே இருக்கிறோம், வேறெங்கும் செல்லப் போவதில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்த நிலை யில், ஒன்றிய ஆணையர், மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்களை அழைத் துப் பேசினார். இதில் ஆண்டிபாளையத்தில் தற்போதுள்ள ஆழ்குழாயை இன் னும் ஆழப்படுத்தி, தற்போதுள்ள 5 எச்.பி. மோட்டாருக்கு பதிலாக 7.5 எச்.பி. திறனுள்ள மோட்டார் பம்ப்பை உடனடியாக மாற்றித் தரு வதாகவும், கூடுதலாக ஒரு ஆழ் குழாய் அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தார். இந்த கிராமத் துக்கு அத்திக்கடவு திட்டத்தில் கூடுதல் குடிநீர் வழங்க கரியாம்பா ளையத்தில் இருந்து ஆண்டிபா ளையம் வரை குடிநீர் விநியோகிக்க குழாய் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து ஆட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பணி செய்யப்பட்டு ஆண்டிபாளையம் குடிநீர் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்ப டும் என்றும் ஆணையர் தெரிவித் தார். ஆழ்குழாய்கள் பணி முடி வடைய சில தினங்கள் ஆகும் என் பதால் அதுவரை லாரி மூலம் அங்கு குடிநீர் விநியோகம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.