tamilnadu

img

திருப்பூர் 3ஆவது வார்டில் குடிநீர், சாலை பிரச்சனைகள்

திருப்பூர், ஜூலை 1 – திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச் சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தி நூற்றுக் கும் மேற்பட்டோர் முதலாவது மண்டல அலுவலகத்தை முற்று கையிட்டு மனுக் கொடுத்தனர். தியாகி குமரன் காலனி பகுதி யில் பழுதடைந்த தார்சாலை களைச் செப்பனிடவும், வடிகால் இல்லாத பகுதிகளில் புதிதாக வடிகால் அமைக்கவும், வீதி விளக்குகள் அமைக்கவும், விஜய புரி கார்டனில் புதிதாக வடிகால், வீதி விளக்கு, தார்ச்சாலை அமைத்திடவும், டெக்மா நகரில் இரு வருடங்களாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாததை விரைந்து வழங்கவும், அன்னை யம்பாளையம் முதல் கூத்தம் பாளையம் வரை சாலைகளைச் செப்பனிடவும், தெருவிளக்கு, குடிநீர், காங்கிரீட் சாலை அமைக் கவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் விஜயபுரி கார்டன், குமரன் காலனி பகுதி களில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதன்பின் திங்களன்று இப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையில் மண்டல அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.மாரப்பன், வி.பி.சாமிநாதன்,விஜயபுரி கார்டன் கிளைச் செயலாளர் என்.பாண் டுரங்கன், குமரன் காலனி கிளைச் செயலாளர் பிராஜாமணி ஆகி யோர் இதில் பங்கேற்றனர். இதையடுத்து மண்டல உதவி  ஆணையர் வாசுகுமார், சுகாதார மேற்பார்வையாளர் முருகன், காவல் ஆய்வாளர் சுரேஷ் உள் ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத் தினர். இந்த பேச்சுவார்த்தையில் டெக்மா நகரில் 15 நாட்களில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும், ஒட்டபாளையம், அன்னையம்பாளையம் பகுதி களில் புறவழிச் சாலையில் பிர தான விநியோகக் குழாயில் இணைப்பு வழங்கவும், எரியாத  மற்றும் தேவைப்படும் தெரு விளக்குகள் கணக்கெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறை வேற்றுத் தரவும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். பிற பிரச் சனைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.