அவிநாசி, ஆக. 5- உடல் உறுப்புக்களை தானம் செய்த வரின் குடும்பத்தினர் தற்போது வறுமை யின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலை யில் மாவட்ட ஆட்சியர் உதவிட கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நக ரைச் சேர்ந்தவர் ஏ.குணசேகரன். ஒர்க்சாப் தொழிலாளியான அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி படுகாயமடைந் தார். இதையடுத்து அவரை அருகிலுள்ள வர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரைப் பரி சோதனை செய்த மருத்துவர்கள் மூளைச் சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குணசேகரனின் குடும்பத்தி னர் ஆலோசனை செய்து ஏ.குணசேகர னின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கோவை மெடிக்கல் சென்டரில் நடை பெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி பங்கேற்று சான்றிதழ் களை வழங்கினார். அப்போது, குணசேக ரனின் மனைவி பத்மா சான்றிதழை பெறும்போது,தனது கணவர் இறந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது. தையல் தொழில் செய்து இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றேன். எனவே மாவட்ட ஆட்சியர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனை ஆட்சியர் பரிசீலிப்பதாகக் கூறிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.