புதிய கட்டிடம் கட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை
இளம்பிள்ளை, டிச.3- சேலம் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், அதனை இடித்து விட்டு புதிய சமுதாய நலக்கூடம் கட்டு மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள ராஜபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி பகுதி யில் சமுதாய நலக்கூடம் 35 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப் பட்டது. தற்போது சமுதாய நலக்கூடம் சிதிலமடைந் துள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத் தான நிலையில் உள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகு தியை சேர்ந்தவர்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு தனியார் மண்ட பங்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் மேலும், சமுதாயக்கூடம் அருகில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, துவக்கப்பள்ளி ஆகியவை உள் ளது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிதிலமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அவ்விடத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.