பொள்ளாச்சி, அக்.24- நாடு முழுவதும் கொரோனோ பரவல் கார ணமாக கடந்த ஆறு மாத காலமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. தற்போது, சில தளர்வுகள் அளிக்கப் பட்டு இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகி றது. இந்நிலையில் ஆறுமா தகாலமாக மூடப்பட்டி ருந்த, பொள்ளாச்சி திப்பம் பட்டியிலுள்ள இளநீர் வணிக வளாகம் கடைகள் தற்போது ஏலத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் வருகின்ற அக்.28 ஆம் தேதியன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் அலு வலகத்தில் கண்காணிப் பாளர் முன்னிலையில் நடை பெற உள்ளது.