tamilnadu

கோவை மற்றும் ஈரோடு செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கு கோவையில் 3 மையங்களில் ஆன்லைன் கலந்தாய்வு
கோவை, ஜூலை 6- பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கோவையில் மூன்று மையங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சுகந்திராணி கூறியதாவது, பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 28ஆம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப் படுகிறது. கோவையில் சித்தாப்புதூரில் உள்ள அரசு மக ளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிஐடி ஆகிய கல் லூரிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் 46 கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உதவி மையங்களுக்குச் சென்றும், வீட்டில் இருந்தவாறும் கலந் தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம். மதிப்பெண் தரவரிசைப்படி நான்கு சுற்றுகளாகக் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய கடந்த 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் 200 முதல் 178 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள அதாவது தரவரி சையில் 1 முதல் 9,872 வரை உள்ள மாணவர்கள் அனு மதிக்கப்படுவர். இந்தச் சுற்று மாணவர்கள் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்து விட வேண்டும். அதன் பின்னர் முதல் சுற்று மாணவர்க ளுக்கான தற்காலிக ஒதுக்கீடு விவரம் ஜூலை 11ம் தேதி வெளியிடப்படும். அதை ஜூலை 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இறுதி ஒதுக்கீடு ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும்.  ஜூலை 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தரவரிசை 9,873 முதல் 30,926 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். மூன் றாம் சுற்று கலந்தாய்வு ஜூலை 13 முதல் 17 அம் தேதி வரை நடைபெறும். இதில் தரவரிசையில் 30,927 முதல் 64,093  வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஜூலை 18 முதல் 20ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு  செய்துவிட வேண்டும். 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் நான்காம் சுற்று கலந்தாய்வில் தரவரிசை 64,094 முதல் 1,01,692 வரை உள்ள மாணவர்கள் அனு மதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஜூலை 28ல் வெளியிடப்படும். இவ் வாறு அவர் கூறினார்.

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில்  103 குடியிருப்புகள் ஒதுக்கீடு 
ஈரோடு, ஜூலை 6- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு 103 குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து  ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆணைகளை வழங்கினார். ஈரோடு மாநகரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.35.47 கோடி மதிப்பீட்டில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் தலா 397 சதுர அடியாகும். ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டப்பகுதியில் தார் சாலை, மழைநீர் வடிகால், கழிவு நீர் அகற்றும் வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி, பூங்கா,  மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பு மற்றும் தெரு விளக்கு கள் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் உள்ளது. முதற்கட்டமாக இக்குடியிருப்புகளுக்கு முழு பங்களிப்புத் தொகை செலுத்திய 103 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து  ஆணை வழங்கப்பட்டுள்ளது என சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச் சியில் ஆட்சியர் கூறினார்.

ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு
கோவை, ஜூலை 6- கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளிலிருந்து வண்டல் மண் எடுத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், நீர்நிலை களைத் தூர் வாரி, ஆழப்படுத்தும் நோக்கத்திலும், ஏரி, குளங் களில் விவசாயத்திற்குத் தேவையான வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம், 30-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட  தொழிலாளர்களும், பொதுமக்களும் சொந்தத் தேவைக்கு மற்றும் விவசாயிகளின் விவசாய தேவைக்கும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப் பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகளிலிருந்து களி மண், வண்டல் மண், சவுடு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அரசு விதிகளின்படி விவசாயிகள் விவசாயத் தேவைக்கு வண்டல் மண், களிமண் நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டரும் (25 டிராக்டர்), புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டரும் (30 டிராக்டர்) மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு மண், சவுடு, கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10 டிராக்டர்) மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை கட்டணமின்றி எடுத்துச் செல்ல தொடர்புடைய வட் டாட்சியர்களால் அனுமதிக்கப்பட்டது. மேலும் வண்டல் மண் மிகுதியாக உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் புதிதாகக் கண்டறியப்பட்டு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நீர்நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்படுவதால் மழைக்காலங்களில் கூடுதலான மழைநீரை சேமிக்க இயலும்.    எனவே, இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.