tamilnadu

img

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம், நவ. 4- பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி மக்கள் சங் கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமம் மலையாளம் பகுதியில் பல ஆண்டு களாக பழங்குடி மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசாணை எண் 318 இன் படி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு நிலை மாறு தல் செய்து பட்டா வழங்க வேண்டும். இதே போல், காடையாம்பட்டி ஒன்றியம் மோரூ ரில் பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் இன  மக்கள் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சாதிச்சான்று  கேட்டு மனு கொடுத்து பல ஆண்டுகளாகி யும் இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப் படவில்லை. இதனால் குழந்தைகளை  படிக்க வைக்க முடியாமல் இருளர் இன மக் கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர்.  எனவே, இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் திங்க ளன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எ.மோகன், விமலன், பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் பி. அண்ணா மலை, செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.