tamilnadu

img

பேருந்துகள் மோதி விபத்து: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சேலம், அக்.10- சேலத்தை அடுத்த அயோத்தி பகுதியில் வியாழனன்று  இரு பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 50க்கு  மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.   வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இராமலிங்கபுரம் அடுத்த அயோத்தியாபட்டணம் செல்ல முற்பட்டபோது இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இதில் அரசுப்  பேருந்து பயணிகள் 50க்கும் மேற்பட்டோரும், தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ,  மாணவியரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர் களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனை  சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த  விபத்து குறித்து காரிப்பட்டி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விபத்தின் காரணமாக அயோத்தியாபட்டணம்  பகுதியில் புறவழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு  மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

;