tamilnadu

img

ஏற்காட்டில் காலத்தால் மறக்கடிக்கப்பட்ட செங்கலுத்துப்பாடி சுற்றுலா தலங்கள்

சேலம் மாவட்டம், சேர்வரா யன் மலையில் 1820 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் வாழ்ந்து  வந்தனர். 1890 ஆம் ஆண்டு வில்லி யம் மில்லர் என்பவர் ஏற்காட்டில் 80 சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டார். அப்போது ஆங்கி லேய அரசு அதனை ஆவணமாக வும் வெளியிட்டது. வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளும் அந்த  சுற்றுலா இடங்களுக்கு சென்று  வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னர் ஆங்கிலேயர் தங்கள் நாட்டிற்கு திரும்பிய பின், பல சுற்றுலா தலங் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாததால், அவை காலத்தால்  மறககடிக்கப்பட்டன.  இவற்றில் செங்கலுத்துப்பாடி கிராமத்தில் உள்ள சுற்றுலா தலங் கள் மிகவும் முக்கியமானதாகும் அவற்றை, ஏற்காடு வரலாற்றை ஆய்வு செய்யும் அறிவியல் எழுத்தா ளர் இளங்கோ தலைமையில், செல் வம், கிருஷ்ணமூர்த்தி, ராஜாமணி ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஏற்காடு இளங்கோ கூறியதாவது, ஆங்கிலேயர்கள் வெளியிட்ட சுற்றுலா தலங்களின் பட்டியலில் முதல் இரு இடங்கள் வகிப்பது சேங்கலுத்துப்பாடி குகை மற்றும் செங்கலுத்துப்பாடி செங் குத்து பாறை காட்சி முனை ஆகும். 2016 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட செங்கலுத்துப்பாடி காட்சி முனை புதியது. இது ஆங்கிலேயர் காலத் தில் அறிவிக்கப்பட்டது அல்ல.      

செங்குத்து பாறை காட்சி முனை

ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள செங்கலுத்துப்பாடி கிராமத்தின் வடகிழக்கில் உள்ள வனப்பகுதியில் இந்த காட்சி முனை அமைந்துள்ளது. அங்குள்ள பாறை யின் மீது பெரிய அளவிலான பாறாங்கற்கள் ஒன்றன் மீது ஒன் றாக அடுக்கியவாறு இயற்கையாக அமைந்துள்ளது. இது தரைமட்டத் தில் இருந்து சுமார் 1000 அடி உய ரம் வரை உள்ளது. இந்த மலை முகடு கடல் மட்டத்தில் இருந்து 1,247 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கிருந்து வத்தல் மலை, அரூர், பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி ரயில்பாதை ஆகிய வற்றின் அழகை ரசிக்கலாம்.

செங்கலுத்துப்பாடி குகை 

பாறைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு பெரிய பாறையின் கீழே ஒரு குகை உள்ளது. இரண்டு அறைகள் உள்ள இந்த குகையின் முன்பகுதியானது தாழ்வாரம் போன்றது. அதில் 15  பேர் வரை அமரலாம். அதன் அடுத்த பகுதிக்கு செல்ல 5 அடி உயரம் கொண்ட துவாரம் உள்ளது. அதன் வழியே சென்றால் அடுத்த பகுதி யில் ஒரு தாழ்வாரம் உள்ளது. அங்கு 20 பேர் வரை அமரலாம். மழை பெய்யவும் போது, அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் அங்கு ஓய்வு எடுக்கின்றனர்.

பிளவு சந்துப்பாறை

குகைக்கு அடுத்து சிறிது தூரத் தில் பிளவு சந்திப்பாரை உள்ளது. இது மிகவும் ஆச்சரியமானது. இரண்டு பாறைகளுக்கு இடையே  20 அடி நீளத்தில் சந்து உள்ளது. இது 2 அடிக்கு குறைவான அகல முடையது. இப்பாதை வழியாக ஒருவர் ஒருபுறமாக திரும்பியபடியே நடந்து செல்லமுடியும். இந்த பாறை பிளவில் ஒரு பாறை மாட்டிக் கொண்டு தொங்குகிறது. இந்த சந்து வழியே சென்றால் மறுபுறத் தில் அழகிய காட்சி முனை உள் ளது. அங்கு பலகை வடிவிலா கற் களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக் கிய அமைப்பு கொண்ட எடுத்து வச்சான் கல் உள்ளது. 

செங்குத்துப் பாறைகள்
குகையை ஒட்டி இரண்டு மிகப் பெரிய செங்குத்துப்பாறைகள் உள்ளன. ஒன்று சுமார் 400 அடி  உயரமும், மற்றொன்று 500 அடி உயரமும் கொண்டது. இப்பாறை கள் அச்சில் வார்த்தது போல, ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறது.  இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பாதை வசதி கிடை யாது. தனி நபர்கள் செல்வது என் பது ஆபத்தானது. சுற்றுலா துறை மூலம் பாதை வசதி அமைத்து, பாதுகாப்பு வேலிகள் அமைத்தால் இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாறும்  என்று அவர் கூறினார்.