tamilnadu

img

சிறுத்தை தாக்கியதில் எருமைக்கன்று பலி

பொள்ளாச்சி, செப்.27 - பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை ஸ்டோன் மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் எருமைக் கன்று பலியானது.   கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால் பாறை ஸ்டோன் மோர் எஸ்டேட் பகுதியில்  வியாழனன்று 2 வயது கொண்ட ஆண் எருமைக் கன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில், இந்த எருமைக் கன்றினை சிறுத்தை தாக்கியிருக்கலாம் என்றும், அதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க கூடும் என கருதப்படுகிறது.  அதேநேரம்,  குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  குறிப்பாக, இப்பகுதியில் ஒரே வாரத்தில் நடை பெற்ற இரண்டாவது  சம்பவமாகும்.  ஆகவே, இந்த சிறுத் தையினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் விரைந்து தலையிட்டு சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.