தருமபுரி, ஜூலை 26- மனதிற்கு ரீலாக்ஸ் கொடுப் பதற்கு உள்ளப்பயிற்சிக்கு புத்தக வாசிப்பு அவசியம் என தருமபு ரியில் நடைபெற்ற புத்தகத்திரு விழா துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார். தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத் தும் 2 ஆம் ஆண்டு புத்தகத் திரு விழா தருமபுரி மதுராபாய் திரு மணமண்டபத்தில் ஜூலை 26 ஆம் தேதிமுதல் ஆக.4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந் நிலையில் வெள்ளியன்று நடை பெற்ற துவக்கவிழாவிற்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் இயக்குனர் தீபக் மணிவண்ணன் தலைமை வகித் தார். வரவேற்புக்குழு செயலாளர் மருத்துவர் இரா.செந்தில் வர வேற்றார். புத்தகதிருவிழாவை துவக்கி வைத்து, விழா மலரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வெளியிட்டர். மேலும், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ப.ராஜன், கல்லூரி கல்வி இயக்கம் இணை இயக்குனர் முனைவர் எம்.சகுந்தலா, முதன்மை கல்வி அலுவலர் மு.இராமசாமி, புத்தக பேரவை ஒருங்கிணைப்பு குழுவினர் இரா.சிசுபாலன், இராஜ சேகர், கண்ணன், ராஜன், எம்.கார்த்திகேயன், ச.கவிதா ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக இவ்விழாவில் மருத்துவர் இரா.செந்தில் பேசிய தாவது, புத்தகவிழா சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகமும், ஆசி ரியர்களும் பெரும்பங்காற்றி, தன் சொந்த நிகழ்ச்சியாக நடத்தி வருகின்றனர். தகடூர் புத்தக பேரவையும், பாரதிபுத்தகாலயமும் இணைந்து புத்தக திருவிழா நடப்பது குறித்து மாணவர்களி டையே வாசிப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த புத்தகத்திருவிழாவில் மாணவர் பங்கேற்பை உறுதி செய்து மாணவர்களின் அறிவுத் திறனை பெருக்க வழிவகுக்கும் என பேசினார். ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் இயக்குனர் தீபக் மணிவண்ணன் பேசுகையில், புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்ல பேச்சாளர்களையும், அதிகாரி களையும், அறிவுஜீவிகளை உரு வாக்கும். தருமபுரி மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கல்வியில் முன் னேற்றமடைந்துள்ளது. படிக்கும் பழக்கம் எல்லோருக்கும் வர வேண்டும் என கூறினார்.
கல்லூரி கல்வி இயக்கம் இணை இயக்குனர் முனைவர் எம்.சகுந் தலா பேசுகையில், மாவட்டத்தி லுள்ள 60 கல்லூரி கல்வி நிறு வனங்கள், 33 கல்வியியல் கல்லூரி கள், 27 அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளுக்கு புத்தகதிரு விழா குறித்து சுற்றரிக்கை அனுப் பப்பட்டு மாணவர்களுக்கு புத்தக திருவிழா குறித்து அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. மாணவர்கள் வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்தி வீட்டிற்கு ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண் டும். புத்தகதிருவிழாவின் முக்கி யத்துவத்தை தெரியப்படுத்த வேண்டும். வாழ்க்கையின் தரத்தை உயர்த்த புத்தகத்தை படிக்க வேண்டும் என கூறினார். முதன்மை கல்வி அலுவலர் மு.இராமசாமி, பேசுகையில், முத லாமண்டு புத்தகதிருவிழா மிகப் பெரிய வெற்றி பெற்றது. புத்தகத் திருவிழா குறித்து மாணவர்களிடம் கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிகப்பெரிய முயற்சி எடுத்தார் கள். தற்போது மாணவர் சமு தாயத்திடம் வாசிப்பு பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் வாரச்சந்தைக்கு செல்லும் போது அங்கு பொருட்களை பேப்பரில் கட்டிக்கொடுப்பார்கள். வீட்டிற்கு வந்த உடன் அந்த பேப்பரை மாண வர் சமுதாயம் படிக்கும் பழக்கம் இருந்தது. இது ஒரு பொழுது போக்காகவும் இருந்தது. ஆனால் தற்போது சமூக ஊடகத்திலும், கணினியிலும், தொலைகாட்சி பெட்டி முன்பும் பொழுதை கழிக் கும் நிலை உள்ளது. நவீன தொழில் நுட்பத்தின் மூலம் தெரிவு பெற்றா லும், புத்தக வாசிப்பின் மூலமே கருத்துகள் மனதில் பதியும். எனவே வாசிப்பு பழக்கத்தை ஏற் படுத்திக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பேசுகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் கல்வி அறிவில் 62 சதவிகிதமாக இருந்தது. தற்போது 92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் பள்ளி கல்வியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர் களின் 95 சதவிகிதமாகும், கல்வியில் தருமபுரி மாவட்டம் முன்னேறி வருகிறது. உடலுக்கு ஆரோக்கியம் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் மாண வர்கள் உடல் பருமன்பெருகும். 40 வயது கடந்தால் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய் களுக்கு உள்ளாகவேண்டியி ருக்கும். ஆரோக்கியான வாழ்விற்கு உடற்பயிற்சி அவசியம். இதேபோல், மனதிற்கு ரீலாக்ஸ் கொடுப்பதற்கு உள்ளப்பயிற்சிக்கு புத்தகவாசிப்பு அவசியம். இதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அறி வியல், கணித பாடப்படிப்பைவிட மாணவர்கள், இளம் வயதில் மற்ற புத்தகங்களை படிக்க சொல்வது அவசியம். ஆசிரியர் கள் மாணவர்களின் தனித்தி றனை அறிந்து அதற்கேற்ப புத் தகத்தை வாசிக்க செய்ய வேண் டும் என தெரிவித்தார்.