tamilnadu

கேரளத்தில் கன மழைக்கு வாய்ப்பு

 திருவனந்தபுரம், ஜுன் 9- அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து புயலாக மாற வாய்ப் புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்தமாக மாறும் என அறி விக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கேரளத்தில் திருவனந்த புரம் உள்ளிட்ட 7 தெற்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஞாயிறன்று காலை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

;