tamilnadu

img

கென்யாவில் பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி

கென்யாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் திறன் மேம்பாட்டு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று காலை மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நிலையில், திடீரென ஒரு வகுப்பறையில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது. இதில் பள்ளியின் மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய மாணவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 57 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

;