tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி, மே 3-தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையில் தொடர்ந்து 29 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.பி. ஜெயராமனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பட்டு வளர்ச்சித் துறையில் துணை ஆய்வாளர், பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் ஜெயராமன். அவரது பணி நிறைவு பாராட்டு விழா தின்னூர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி இயக்குநர் ஹரிலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் காதர் முன்னிலை வகித் தார். இணை இயக்குநர் செல்வச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். உதவி ஆய்வாளர் கண்ணாமணி நன்றி கூறினார்.அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் நிர்வாகிகள் நடராஜன், சீனிவாசலு, தேவராஜ், மணிகண்டன், கஸ்தூரி, கருப்பசாமி ஆய்வாளர் பொன்மாரி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

;