கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் தந்தை பெரியாரின் வெண்கல சிலைக்கு விஷமிகள் தீவைத்தசம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த கத்தாழை மேடு பகுதியில் சமத்துவபுரத்தில் வைக்கப்
பட்டிருந்த பெரியாரின் சிலைக்கு சனிக்கிழமையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவத்திற்கு திக தலைவர் கி.வீரமணி மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள னர். தீ வைத்த சமூக விரோதிகளை கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர்.பெரியாரின் சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.