tamilnadu

காலமானார்

கிருஷ்ணகிரி, மே 2-கிருஷ்ணகிரி மாவட்ட சிபிஎம் செயற்குழு உறுப்பினர் சாம்ராஜியின் தாயார் எல்லம்மாள் காலமானார். அவருக்கு வயது 92. அவரது சொந்த ஊரான தேன்கனிக்கோட்டை உச்சணப்பள்ளியில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் எல்லம்மாளின் உடலுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சேகர், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நஞ்சுண்டன் , சுரேஷ் வட்டச் செயலாளர் வெங்கடேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் எம். இலகுமையா மார்க்சிஸ்ட் கட்சி வட்டக் குழு உறுப்பினர்கள் சந்திசேகர், ஓசூர் வட்டச் செயலாளர் மூர்த்தி, வாலிபர் சங்கம், விவசாயிகள், மாதர் சங்கம் , சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.