tamilnadu

img

நோய் பரப்பும் மையமாக காங்கேயம் தபால் நிலையம்

திருப்பூர், நவ. 6- திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் முகப்புப்பகுதி முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக உள்ளது. காங்கேயம் தலைமை தபால் நிலையம் முன்பாக  நுழைவாயில் கதவுப் பகுதியிலேயே சாக்கடை நீர் தேங்கி  நிற்கிறது. முகப்புப் பகுதியின் இருபுறமும் நடைபாதையைச் சூழ்ந்து கழிவுநீர் தேங்கி இருப்பதுடன், அதில் கொசுக்கள்,  பூச்சிகள் உற்பத்தியாகி இருக்கின்றன. தற்போது மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல்கள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், காங்கேயத்தில் மக்கள் அதிகளவில் வந்து  செல்லும் தபால் நிலையப் பகுதியிலேயே இதுபோல் நோய்  உற்பத்தி மையமாக காட்சியளிப்பது பொது மக்களை  அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. காங்கேயம் நகராட்சி நிர்வாகம் இது குறித்து  உடனடியாகத் தலையிட்டு, கழிவுநீரை வெளியேற்ற வும், கொசு மருந்து தெளித்து, நோய்த் தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்று காங்கேயம்  பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.