கிருஷ்ணகிரி, நவ. 2- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பு மாநாடு சூள கிரியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயி கள் சங்க வட்டச் செயலாளர் முனியப்பா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் சரவணன், துணைத் தலைவர் ஏவி.சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மலைவாழ் மக்கள் வசிக்க்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கிம் பகுதியில் எந்த அடிப்படை வசதி களும். சலுகைகளும் வழங்கப்படவில்லை. எனவே வீட்டு மனைப் பட்டா, தொகுப்பு வீடு கள், சாலைகள், மின்விவிளக்கு வசதிகள், அருகாமை பள்ளிகள், தொழில் தொடங்க மானியக் கடன் 10 லட்சம் வரை வழங்க வேண்டும். பழங்குடி மலைவாழ் மக்கள் நல வாரிய அடையாள அட்டை சாதிச்சான்று உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பா.சின்னப்பா, முனியப்பா உள்ளிட்ட 9 மாவட்ட அமைப்புக் குழு தேர்வு செய்யப் பட்டது. கொத்தகவுண்டன்பட்டி ராமன் தொட்டி பகுதிக்கு சாலை கேட்டு போராட்டம் நடத்து வது, டிசம்பர் 2இல் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு பட்டா, தொகுப்பு வீடுகள், அடிப்படை வசதிகள், சாதித் சான்று கேட்டு சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிடுவது என தீர்மானிக்கப்படுள்ளது. விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் இருதயராஜ், முன்னாள் தலை வர் திராடி முனிசாமி, வட்டத் தலைவர் எம்.எம்.ராஜு, மாவட்ட துணைத் தலைவர் சபாபதி, சீனிவாசலு, முருகேசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராஜப்பா நன்றி கூறினார்.