tamilnadu

உறங்காத சவுதாம்ப்டன்?

கிரிக்கெட் மைதானங்கள் 2 முதல் 4 மணிநேரம் வரை அதிக உயிரோட்டமாக இருக்கும். இரண்டாம் பேட்டிங்கின் (ஒருநாள் போட்டி) நடுப்பகுதியில் உறங்கிவிடும். அதாவது மந்தமாக மாறிவிடும். ஆனால் சவுதாம்ப்டன் மைதானம் தொடர்ந்து 7 மணிநேரம் உறங்காமல் விழித்திருந்தது. இதனால் இரு அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணி விரைவாக ரன் குவிக்க முடியாமல் திணறித்தான் வெற்றியை ருசித்தது. இந்த மாதிரியான ஆடுகளம் டெஸ்ட் போட்டிகளுக்குத் தான் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.