tamilnadu

img

ஐசிசியின் திட்டம் தோல்வியா?

ஒலிம்பிக் விளையாட்டிற்கு அடுத்த படியாகப் பிரச்சனையின்றி சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்துவது ஐசிசி மட்டுமே. இத்தகைய சிறப்புப் பெருமையைப் பெற்றுள்ள ஐசிசி-க்கு 2019-ஆம் ஆண்டின் தொடக்கமே சரியில்லை. இங்கிலாந்து நாட்டில் 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரை நடத்தியது தான் முக்கிய பிரச்சனை. இதற்குக் காரணம் இங்கிலாந்து நாட்டில் வழக்கத்திற்கு மாறாக மழை பிழிந்தெடுத்து வருகிறது. இதனால் வானிலை பற்றி ஆய்வு செய்யாமல் ஏன் இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை போட்டியை நடத்தினீர்கள் என அனைத்து நாட்டு ரசிகர்கள் ஐசிசி-யை கடிந்து கொள்கின்றனர்.  இது இயற்கையின் செயல்பாடு ஐசிசி-யால் ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக  5 ஆண்டுகளுக்கு முன்னரே உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் நாடு தேர்வு செய்யப்படுவதால் காலநிலை குறித்து திடமான முடிவு எடுக்க முடியாது. தீர்க்கமான முறையில் வானிலையை ஆராய்ந்தாலும் பருவநிலை மாறுபாட்டுக்கு என்ன செய்ய முடியும். மழைக்கு ஐசிசி பொறுப்பாக முடியுமா?