பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பெண்களுடன் சாட்டிங் (குறுஞ்செய்தி) செய்த முகப்பு பக்கம் (ஸ்கிரீன் ஷாட்டுகள்) இணையத்தில் வெளியாகியது. ஒரு பெண்ணுடன் சாட்டிங் செய்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ஆனால் இமாம் 12க்கும் மேற்பட்ட பெண்களுடன் தகாத முறையில் சாட்டிங் செய்ததால் சர்ச்சை வெடித்தது. ஆன்லைன் ஆர்மிகள் சும்மா இருப்பார்களா இமாம் உல் ஹக்கை மீம்ஸ் மூலம் எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்தனர். இந்நிலையில், சாட்டிங் விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கானிடம், இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த தகவலை வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
பிசிபி எச்சரிக்கை
இமாம் உல் ஹக்கின் சாட்டிங் சர்ச்சையை முன்னுதாரணமாக வைத்து எச்சரிக்கை மொழிகள் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியது. இது குறித்து வாசிம் கான் கூறியதாவது, “சாட்டிங் செய்வது வீரர்களின் (இமாமின்) தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், ஒழுக்கத்தையும், நெறிமுறை களையும் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடும் வீரர்களுக்கு அதிக பொறுப்பு இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.