tamilnadu

img

சென்னை அபாரம் நிலைகுலைந்த கேரளா

ஐஎஸ்எல் கால்பந்து உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்தோடு சொந்த மண்ணில் களமிறங்கிய சென்னை அணியினர் தங்களின் அபார ஆட்டத்தால் கேரளாவை நிலைகுலையச் செய்ததோடு 3- 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். நடப்பு சீசனில் சென்னை, கேரளா அணிகளின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தொடர் தோல்விகளால் இரு அணி ரசிகர்களும் சோர்வு இழந்தனர். இத்தகைய பின்னணியில் சென்னையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் வெள்ளியன்று (டிச.20) சென்னை நேரு உள் அரங்கத்தில் நடைபெற்றது.

அலைமோதிய கூட்டம்...

இரு அணி வீரர்களும் உற்சாகப்படுத்த ரசிகர் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே திரண்டது. அதற்கேற்றார்போல்  வீரர்களின் அமைந்திருந்தது. சென்னை அணி வீரர்கள் போட்டியின் தொடக்கத்திலிருந்தே கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர் அதற்கு நாலாவது நிமிடத்திலேயே கைமேல் பலன் கிடைத்தது முதல் கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க விட்டனர். கேரளா வீரர்களின் ஆட்டத்திலும் அனல் பறந்தது பதினைந்தாவது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் கோலாக மாற்றியது கேரள ரசிகருக்கு உற்சாகமானது.

கோல் மழை...

இரு அணி வீரர்களின் ஆட்டமும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. பெரும்பகுதி நேரம் பந்து கேரள வீரர்களை சுற்றியே இருந்ததாலும் சென்னை வீரர்களின் தடுப்பு அரணை மீறி கேரள வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. கேரள வீரர்களுக்கு ஆட்டத்தை காட்டிய சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்தது உள்ளூர் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு அரங்கமே அதிர்ந்தது. ஒரு கட்டத்தில் கேரள அணி வீரர்கள் சென்னை அணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலைகுலைந்தனர். ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை வீரர் ‘பவுல்’ (பந்தை கையால் தடுத்தார்) செய்தார். அப்போது கேரள வீரர்கள் நடுவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சில வினாடிகள் நிகழ்ந்த குழப்பத்தில் தனி நபராக பந்தை கடத்தி சென்ற சென்னை வீரர் கோலாக மாற்றினார். இது கேரள  வீரர்கள் மட்டுமல்ல பயிற்சியாளரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதனால் சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டமும் தடைபட்டது. அது கோலாக இயக்கப்படாததால் பிரச்சனை முடிவுக்கு வந்த  நான்காவது நிமிடமே சென்னை வீரர் கோல் அடித்து அசத்தினார். 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தினர். கேரளா சிறந்த அணி என்றாலும் சொந்த மண்ணில் எங்கள் அணியின் ஆட்டம் உற்சாகமாக இருக்கும் என்ற புதிய பயிற்சியாளர் ஓவன் கோயலின் நம்பிக்கையை சென்னை அணி வீரர்கள் நிரூபித்துக் காட்டினர்.