tamilnadu

img

உப்பளத் தொழிலாளர்கள் போராட்டம்

செய்யூர், மே 18- காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் பத்மா கெமிக்கல்ஸ் என்றதனியார் உப்பளம் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலையில் ரசாயன தொழிற்சாலைகளுக்கு தேவையான கெமிக்கல் உப்பு தயாரிக்கும் பணியில் சூனாம்பேடு, வில்லிபாக்கம் உள்ளிட்ட பல்வேறுகிராமங்களில் இருந்து பெண்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கெமிக்கல் உப்புதயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை சார்பில் உரிய பாதுகாப்பு கவசங்களோ, ஊதியஉயர்வோ வழங்கப்படுவதில்லை. இதனால் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கையை மாவட்டநிர்வாகமோ, தொழிற்சாலை நிர்வாகமோ, செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி முதல்தங்களின் 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உப்பளத்தில் பணி செய்திடும் பெண்கள் உட்பட முன்னூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தநிர்வாக அலுவலகம் வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணும் வரையில் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.