tamilnadu

img

தண்ணீருக்காக நடைபயணம்

தண்ணீர் சேகரிப்பு, நீடித்த சுற்றச்சூழல், கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி படூரில் உள்ள இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரி வளாகத்தில் எச்20 இயக்கம் சார்பில் தண்ணீருக்காக நடைபயணம் நடைபெற்றது. கொடையாளர் டாக்டர் சஞ்சனா ஜான் தலைமையிலான பார் ஆனந்த் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாணவர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான கல்வியாளர்கள், நீதிபதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த நடைபயணத்தை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எல்.ஆர்.இதயவர்மன் தொடங்கிவைத்தார். நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.