கரூர், செப்.26- கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவெளி யூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்காமல் இரண்டு ஆண்டுகளாக திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும், எம்ஜிஆர் நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகளான சாலை, குடிநீர் வசதி களை ஏற்படுத்திட வேண்டும், தோகை மலை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கீழவெளியூர் கிளை சார்பில் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செய லாளர் ஏ.வடிவேல் தலைமை வகித் தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன், ஒன்றிய செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முனியப்பன், சங்க பிள்ளை, ரத்தினம், பாலு, பெருமாள், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.