குளித்தலை, நவ.19- கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் வாளாந்தூர் கிராம மக்கள் அத்தியவசிய தேவை களுக்கு குளித்தலை நகரத் துக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் 100 ஆண்டு களுக்கு மேலாக குளித்த லை ரயில் நிலையத்தின் நடைபாதை வழியாகத் தான் சென்று வந்து கொண்டு இருந்தார்கள். தற்சமயம் ரயில் நிலைய சீரமைப்பு பணியால் நடைபாதையாக பயன்படுத்தி வந்த இடங்க ளில் மிக உயரமாக தடுப்பு சுவர் கட்டபட்டு வருகிறது. ஏற்கனவே இந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்க்கு ரயில் நிலையத்தில் சுரங்க வழி பாதை அமைத்து தர வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ரயில்வே நிர்வாகத்துக்கும். குளித்தலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப் பட்டும் போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த தடுப்பு சுவர் கட்டப்பட்டால் பொதுமக்கள் மாணவர்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி தான் குளித்தலை நக ரத்துக்கு வர முடியும். இந்த கிராமத்திற்க்கு பேருந்து வசதி கிடையாது. இந்த ஊரில் சுடுகாடு கிடையாது. யாராவது இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கும் ஊரை சுற்றி தான் வர வேண்டும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும், ரயில்வே துறை நிர்வாக மும் இணைந்து சுரங்க வழி பாதை உடனடியாக அமைத்து தர வேண்டும். சுரங்க பாதை அமைக்கும் வரை தற்காலி கமாக சுற்றுச் சுவர் அமைக்கும் இடத்தில் பொது மக்கள் நடப்பதற்க்கு வழி விட்டு சுவர் அமைக்க வலி யுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் வாளாந்தூர் கிளை செயலாளர் பால சுப்பிரமணி தலைமையில் ஊர் பொதுமக்கள் இணைந்து குளித்தலை ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டர் மற்றும் குளித்தலை சார் ஆட்சியர் ஆகியோரிடம் ஊர்வலமாக சென்று கோ ரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்ப டும் என அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் இரா.முத்துச்செல்வன் தெரிவித்தார்.