கரூர்: கொங்கு சகோதயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் ஒன்பதாவது ஆண்டு மாநில தடகள விளையாட்டு 2 நாள் திருவிழா கரூர் டி.என்.பி.எல். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சகோதயா கூட்டமைப்பின் தலைவரும் கரூர் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டி.என்.பி.எல். காகித ஆலை முதன்மை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். வரவேற்புரையாற்றிய டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி முதல்வரும் கூட்டமைப்பின் இணைச் செயலருமான முனைவர் அய்யப்பன், “இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இருந்து சிபி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று கூறினார். கொங்கு சகோதயா செயலர் எஸ்.பி.கே பள்ளி தாமோதரன், கரூர் மாவட்ட தடகள சங்க செயலர் பெருமாள், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, சங்கரா வித்யாலயா முதல்வர் ஜெயந்தி, வேலம்மாள் பள்ளி முதல்வர் சாம்சன், ஸ்டார் பள்ளி முதல்வர் சித்தார்த், செட்டிநாடு பள்ளி முதல்வர் வித்யா, பொன் வித்யாமந்திர் முதல்வர் வினோல்டன், ‘ஜீ’ பள்ளி முதல்வர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.