tamilnadu

இந்தியாவுக்கு பொதுமொழி ஒன்று இருக்க முடியாது கே.எஸ்.அழகிரி பேட்டி

நாகர்கோவில், செப்.22- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டு மல்ல உலகிற்கே ஆன்மீக வழிகாட்டி யாக திகழ்ந்தார். ஆக்கப்பூர்வமான அர சியலை வெளி உலகுக்கு உணர்த்திய வர், உலகில் சர்வாதிகாரமா ஜனநாய கமா என்று கேள்வி எழுந்த போது ஜன நாயகம்தான் உகந்தது என்று உணர்த்தி யவர் மகாத்மா காந்தி. எனவே அவ ருடைய நினைவை போற்றும்வகை யில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையை நடத்த உள் ளது. பாதயாத்திரைக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமை ஏற்கிறார்.   இந்த தேசத்தின் பொருளாதாரம் மிகவேகமாக ஏன் சரிந்தது என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். மோட்டார் வாகன தொழில் ஒரே வாரத் தில் நசிந்துள்ளது. 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பார்லே பிஸ்கட் நிறுவனத்தினர், பிஸ்கட் விற்கவில்லை என்று கூறி 10 ஆயிரம் பேரை வேலை யை விட்டு அனுப்பியுள்ளனர். இது எல்லாவற்றிற்கும் பொருளா தார வீழ்ச்சிதான் காரணமாகும். எல்ஐசியின் பணத்தை எடுத்து பாஜக வுக்கு வேண்டியவர்களின் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். இதனால் நடுத்த ரமக்கள் பாதிக்கப் படுவார்கள். கார்பரேட் நிறுவனங்க ளுக்கு 10 சதவீத வரிச் சலுகை அளித் துள்ளனர். இதனால் யாருக்கு லாபம், தனிமனிதருக்குதான் லாபம், ஜிஎஸ்டி யை குறையுங்கள்,விவசாயிகளுக்கு சலுகை அளியுங்கள் என்று கூறுகி றோம் அதை விடுத்து கார்பரேட் நிறு வனத்துக்கு சலுகை வழங்கியுள்ள னர். மத்திய அரசே திறமையற்ற அர சாக உள்ளது. மத்திய அரசின் பொரு ளாதார கொள்கை இந்தியாவுக்கு ஏற்ற தல்ல. நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் நடைபெற உள்ள சட்டப்பேரவை மற்றும் உள்ளாட் சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். இந்த 2 தொகுதி இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்தியாவுக்கு எந்த மொழியும் பொதுமொழியாக இருக்கமுடியாது. இங்கிலாந்துக்கு சென்றால் அங்கு ஆங்கிலம்தான் பேசுவார்கள், பிரான்சுக்கு சென்றால் பிரெஞ்சு மொழி பேசுவார்கள்,ஜெர்மனிக்கு சென்றால் ஜெர்மன் மொழி பேசுவார்கள், இத்தா லிக்கு சென்றால் இத்தாலிய மொழி தான் பேசுவார்கள். ஆனால் இந்தியா அப்படி அல்ல, இங்கு பல்வேறு மொழி கள் பேசப்பட்டு வருகின்றன. இந்தி பர வலாக பேசும்மொழி என்று கூறலாம். இன்னும் சொல்லப்போனால் இந்தி பேசாதவர்கள்தான் இந்தியாவில் அதிகம் உள்ளனர். விருப்பப்பட்டு படித்தால் யார் வேண்டுமானால் இந்தி படிக்கலாம்.மொழியை திணிக்கா தீர்கள் என்றுதான் கூறுகிறோம். தாய்மொழி என்பது அவசியமான ஒன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வு கள் மாநில மொழியில்தான் நடை பெற வேண்டும் என்பது முக்கியம். அந் தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை திமுக கைவிட்டதற்கு, பாஜகவின் மிரட்டல்தான் காரணம் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுவது சரியல்ல, திமுகவை பாஜக மிரட்ட முடியாது, எந்த கட்சியும் மற்றொரு கட்சியை மிரட்ட முடியாது. திமுகவை பாஜக மிரட்டுகிறது என்று கூறும் அமைச்சரை அதே போல் மிரட்டவோ சிறையில் வைக்கவோ எவ்வளவு நேர மாகும். அமித்ஷாவின் வேண்டு கோளை ஏற்றுதான் ஸ்டாலின் போராட்டத்தை திரும்ப பெற்றார். அமித்ஷாதான் திமுகவின் போராட் டத்தை அறிந்து பயந்துவிட்டார், பயந் தது இந்தியாவின் உள்துறை அமைச்சர்தானே தவிர ஸ்டாலின் அல்ல. தமிழக முதல்வர் வெளிநாடு சென்று வெளிநாட்டு முதலீடுகளோடு வந்திருந்தால் மகிழ்ச்சிதான்.ஆனால் ஏற்கெனவே அந்நிய மூலதனத்தை ஈர்க்க 2 முறை மாநாடு நடத்தினார்கள். அவ்வாறு நடத்தியதன் மூலம் எவ்வளவு மூலதனம் கொண்டு வந்தார்கள் என்று விளக்க வேண்டும். தமிழகத்திலே எவ்வளவு மூலதனம் இருக்கிறது. போர்டு, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.அவர்களின் 2 ஆவது அலகை தமிழகத்தில் தொடங்காமல் ஏன் வெளிமாநிலங்களுக்கு செல்கி றார்கள்.தேர்தலில் பணப் பட்டுவாடா வை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது. இது ஆணையத்தை மீறி நடக்கிறதா அல் லதுஅதை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தையும் பாஜக கைப்பற்றி விட்டது என்றுதான் கூறுவேன் என்றார். பேட்டியின்போது, வசந்தகுமார் எம்.பி., எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஸ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தாரகைகத்பட் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.