கடலூர்/ஓசூர், அக். 3- போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவக்க வலியுறுத்தி கடலூர் மண்டல அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொமுச பொருளாளர் பால.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சிஐ டியு பொதுச் செயலாளர் ஜி.மணிவண்ணன், எம்.எல்.எம் தலைவர் யூ.தட்சிணாமூர்த்தி, ஏ.ஏ.எல்.எல்.எஸ் இணை பொதுச் செயலா ளர் கே.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி பாஸ்கரன், எம்.எல்.எப் மாநிலச் செயலாளர் இரா.மணிமாறன், ஏ.ஏ.எல்.எல்.எப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாநிதி, சிஐடியு தலைவர் ஜான்விக்டர், எல்.பி.எப் துணைப் பொதுச்செயலாளர் பாட்சா ராஜேந்திரன், எம்எல்எப் துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச தலைவர் பால முரளி, சிஐடியு தலைவர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சிஐடியு மண்டலத் தலை வர் சண்முகம், தலைவர் தியாகராஜன், கிளைச் செயலாளர் பிரபாகரன், ஓய்வு பெற்றோர் நலச் சங்க நிர்வாகி ராஜா, தொமுச பொதுச் செயலாளர் கிருஷ்ணன், கிளைச் செயலாளர் சோமசுந்தரம் மற்றும் பலர் உரையாற்றினர். சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்க ளின் தஞ்சை உரந்தை போர் முரசு கலைக் குழுவினர் புரட்சிப் பாடல்கள் மூலம் போக்கு வரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை உறக்க முழங்கினர்.